
மூன்று எழுத்தின் தாரக
மந்திரம்!
சேனையோடு உலாவ,
இணையத்தில் ,இதயத்தை
இணைத்த சூத்திரதாரி!
உன் உழைப்பை சொல்லி ,
உன் பிம்பம் பதித்தே
வந்தது உன் படைப்புகள்!
இருபத்திரண்டு என்று
இறுமாப்புக் கொள்ளாமல்,
இணையத்தில் சிரித்ததது!
இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது!துணைப் போனது!
கழித்த நிமிடங்களை,
ரசனைக்குள் இணைத்து,
சேனைக்குள் சோலையாக்கியது!
இது தொடக்கமே.
இனி தொடருவது எல்லாம்,
இதையத்தை இணைக்குமே!
நேற்றும் சொன்னது,
இன்றும் சொல்கிறது,
நாளையும் சொல்லும்....
சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!
இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,
No comments:
Post a Comment